» சினிமா » செய்திகள்

சின்னத்திரை நடிகையின் கணவர் மரணம்: திருமணமான ஒரே ஆண்டில் சோகம்!

வெள்ளி 4, ஆகஸ்ட் 2023 12:34:43 PM (IST)



'நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் நேற்று மாரடைப்பால் இறந்தார். 

திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன நிலையில் திடீரென அவரது மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனது சமூக வலைதளப்பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ஸ்ருதி தெரிவித்திருப்பதாவது, ‘உடல் மட்டும் தான் பிரிந்துள்ளது. உன்னுடைய ஆன்மாவும் எண்ணமும் எப்போதும் எங்களுடனேயே இருந்து எங்களை எப்போதும் பாதுகாக்கும்.

உன் ஆத்மா சாந்தியடையட்டும். என் காதலே! முன்பை விட இப்போதுதான் உன் மீது காதல் அதிகமாகி இருக்கிறது. உன்னுடன் இருந்த நினைவுகளை என் வாழ்நாள் முழுவதும் கொண்டாடுவேன். மிஸ் யூ & லவ் யூ அரவிந்த்! நீங்கள் அனைவரும் சொல்லும் ஆறுதல் எங்களுக்கு மேலும் பலத்தைக் கொடுத்து இருக்கிறது. அனைவருக்கும் நன்றி!’ என அந்தப் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory