» சினிமா » செய்திகள்

புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் ஆறுதல்!

செவ்வாய் 2, நவம்பர் 2021 3:34:02 PM (IST)



சமீபத்தில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார். 
 
கர்நாடக திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) திடீரென மாரடைப்பால் காலமானார்.  இளம் வயதில் அவர் மரணமடைந்தது ஒட்டுமொத்த  இந்திய திரையுலகினரையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  அவரது இறுதிச் சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

புனித் ராஜ்குமாரின் உடல் அவர் தாய் மற்றும் தந்தையின் நினைவிடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து திரையுலகினர் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது வீட்டுக்கு சென்ற சிவகார்த்திகேயன், புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமாரிடம் ஆறுதல் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory