» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டி: மழையினால் பாதிக்கப்பட வாய்ப்பு?

வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:56:31 PM (IST)

இலங்கை தலைநகர் கொழும்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள விறுவிறுப்பான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, மழையினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாகப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அக்யூவெதர் (Accuweather) கணிப்பின்படி, ஞாயிறு காலை மற்றும் மதிய வேளைகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்கவுள்ள போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தப் போட்டி ஏற்கனவே பல சர்ச்சைகளைக் கடந்து வந்துள்ளது. முதலில் வங்கதேசத்திற்கு ஆதரவாகப் போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்த பாகிஸ்தான், பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு இந்தியாவுடன் விளையாடச் சம்மதித்தது. இப்போட்டியைக் காண இரு நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கொழும்பில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு சாம்பியனான இந்திய அணி, அமெரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்று பலமான நிலையில் உள்ளது. பாகிஸ்தான் அணி நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் நூலிழையில் வெற்றி பெற்ற நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory