» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மகளிர் உலகக் கோப்பை: நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது இந்தியா!
வெள்ளி 24, அக்டோபர் 2025 11:06:44 AM (IST)

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நவி மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி டிஎல்எஸ் முறையில் 53 ரன்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரின் அரையிறுதிக்கு 4-வது அணியாக இந்தியா முன்னேறி உள்ளது.
முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. தனது 14-வது சதத்தை விளாசிய ஸ்மிருதி மந்தனா 95 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்த நிலையில் பேட்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
முதல் விக்கெட்டுக்கு ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் ஜோடி 33.2 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸும் மட்டையை சுழற்றினார்.மறுபுறம் சீராக ரன்கள் சேர்த்த பிரதிகா ராவல் தனது 2-வது சதத்தை விளாசி அசத்தினார். சிறப்பாக பேட் செய்து வந்த அவர், 134 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 122 ரன்கள் விளாசிய நிலையில் கெர் பந்தில் வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 10 ரன்களில் ரோஸ்மேரி பந்தில் அவுட் ஆனார். இந்திய அணி 49 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 340 ரன்கள் குவித்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 76 ரன்களும், ரிச்சா கோஷ் 4 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மழை நின்றதும் சுமார் 2 மணி நேரம் கழித்து ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததாகவும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இலக்கு மாற்றி அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.இதன்படி நியூஸிலாந்து மகளிர் அணி 44 ஓவர்களில் 325 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி விளையாடிய நியூஸிலாந்து அணி 44 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் லீக் சுற்றில் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறுகின்ற அணி உடன் இந்தியா அரையிறுதியில் விளையாடும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஃபிஃபா உலகக் கோப்பை 2026: காலிறுதிக்கு முன்னேறிய 8 பலத்த அணிகள்; சொதப்பிய தொடர் நடத்தும் நாடுகள்!
புதன் 8, ஜூலை 2026 12:30:43 PM (IST)

இங்கிலாந்திடம் படுதோல்வி : 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இந்தியா மோசமான சாதனை!
புதன் 8, ஜூலை 2026 11:33:11 AM (IST)

இந்திய அணியிலிருந்து சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம் - பிரப்சிம்ரன் சிங்கிற்கு வாய்ப்பு!
செவ்வாய் 7, ஜூலை 2026 12:03:26 PM (IST)

மகளிர் உலகக் கோப்பை நட்சத்திர அணியில் ஆஸி ஆதிக்கம்: இந்தியாவிலிருந்து தேர்வான ஸ்ரீ சரணி!
செவ்வாய் 7, ஜூலை 2026 11:26:31 AM (IST)

உலகக் கோப்பை கால்பந்து: கால்இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
செவ்வாய் 7, ஜூலை 2026 8:58:47 AM (IST)

உலகக் கோப்பை கால்பந்து: பிரேசிலை வீழ்த்தி நார்வே வெற்றி - முதன்முறையாகக் காலிறுதிக்குத் தகுதி!
திங்கள் 6, ஜூலை 2026 11:51:51 AM (IST)


