» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ரிஷப் பண்ட் காலில் எலும்பு முறிவு: தமிழக வீரர் இந்திய அணியில் சேர்ப்பு!
திங்கள் 28, ஜூலை 2025 11:06:40 AM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டுக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இப்போட்டியில் கிறிஸ்வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அவரது வலது கால் பெரு விரலில் பந்து தாக்கியது. ரத்தம் கசிந்தது. காலில் பயங்கரமான வீக்கம் ஏற்பட்டது. வலியால் அவர் துடித்தார்.
உடனடியாக அணியின் உடல் இயக்க நிபுணர் வந்து முதலுதவி அளித்தார். ஆனாலும் வலி குறையாததால் ஆம்புலன்ஸ் பெயர டப்பட்ட கோல்ப் வண்டி மூலம் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார்.அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.
காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் இந்திய அணிக்காக மீண்டும் வந்து விளையாடிய பண்ட் அரைசதம் அடித்து அசத்தினார். இந்நிலையில், காலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிஎஸ்கே அணிக்கு பெரும் இழப்பு: அதிரடி வீரர் ஆயுஷ் மத்ரே தொடரிலிருந்து விலகல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:11:09 PM (IST)

திலக் வர்மா சதம், அஸ்வனி அசத்தல் பந்துவீச்சு : வெற்றிப் பாதைக்கு திரும்பியது மும்பை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:17:26 PM (IST)

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை: ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் புதிய சாதனை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 4:02:45 PM (IST)

மண்டல அளவிலான மின்னொளி கால்பந்து போட்டி: காயல்பட்டினம் எல்.கே. பள்ளி முதலிடம்
திங்கள் 20, ஏப்ரல் 2026 10:20:55 AM (IST)

பஞ்சாப் கிங்ஸிடம் படுதோல்வி: மும்பை அணியில் அதிரடி மாற்றமா? ஹர்திக் பாண்டியா ஆவேசம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:06:10 AM (IST)

மீண்டும் ஒருமுறை தமிழகத்தின் பெருமையை உயர்த்திய வைஷாலி: நயினார் நாகேந்திரன் பாராட்டு
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:19:23 PM (IST)

