» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசு: நவீன் பட்நாயக் அறிவிப்பு!
செவ்வாய் 20, ஜூன் 2023 10:27:35 AM (IST)
இன்டர்காண்டினென்டல் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் லெபனான் அணியை சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி 46-வது நிமிடத்திலும், லாலியன்ஷுவாலா ஷாங்க்டே 66-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.