» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: உடன்குடி ராக்கர்ஸ் அணிக்கு முதல் பரிசு.
திங்கள் 12, ஜூன் 2023 9:17:55 PM (IST)
பொத்தகாலன்விளையில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் உடன்குடி ராக்கர்ஸ் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.
சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளையில் செயின்ட் மேரிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் உடன்குடி, திசையன்விளை, பேய்க்குளம், இட்ட மொழி, சாத்தான்குளம், சிவலூர் உள்ளிட்ட 32 அணிகள் பங்கு பெற்றன. போட்டியை பொத்தகாலன்விளை ஜி.டி.எம். பிரபு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் லூர்துமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இறுதிப் போட்டியில் பொத்தகாலன் விளை செயின்ட் மேரிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், உடன்குடி ராக்கர்ஸ் அணியும் மோதின. இதில் உடன்குடி ராக்கர்ஸ் அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச்சென்றது. 2ஆம் பரிசு பொத்தகாலன்விளை செயிண்ட் மேரி அணிக்கு கிடைத்தன.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு பெற்ற உடன்குடிராக்கர்ஸ் அணிக்கு மாவட்ட கவுன்சிலர் தேவவிண்ணரசி முதல் பரிசான ரூ10ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கினார். இரண்டாம் பரிசு பெற்ற செயின்ட் மேரிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு சென்னை தொழிலதிபர் ராஜா சார்பில் அவரது சகோதரர் கட்டட ஒப்பந்தகாரர் சூசை, ரூ7 ஆயிரத்தை வழங்கினார். மூன்றாம் பரிசு பெற்ற வரிப்பிலான்குளம் அணிக்கு கட்டட ஒப்பந்தகாரர் செல்வன், ரூ 5000ஐ வழங்கினார்.
நான்காம் பரிசு பெற்ற பெருமாள்புரம் அணிக்கு வேதக்கண் அறக்கட்டளை நிறுவனர் செல்வின் வேதக்கண் வழங்கினார். 5ஆம் பரிசு பெற்ற சிறப்பபூர் அணிக்கு, செயின்ட்மேரிஸ் ஸபோட்ஸ் கிளப் அணி பரிசு வழங்கியது.. சிறந்த ஆட்டகாரர்களுக்கான பரிசுகளை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் லூர்துமணி வழங்கினார். போட்டிக்கான வர்னனையாளராக வில்பர்ட் செயல்பட்டார். இதில் நரையன்குடியிருப்பு மந்திரம், சீமான், கஸ்பார், புதுக்குடி சுரேஷ், கவாஸ்கர் (எ) ராஜன்,வெலிட், ஆண்ட்ரூஸ், ஆண்டனி அஸ்வின் உள்¢ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜி.டி.எம் .பாபு நன்றி கூறினார்.