» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது: ஜனாதிபதி வழங்கினார்
வியாழன் 1, டிசம்பர் 2022 12:14:44 PM (IST)

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதே போல் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் மொத்தம் 25 பேருக்கு அர்ஜுனா விருது, 4 பேருக்கு துரோணாச்சார்யா விருது, 4 பேருக்கு தியான்சந்த் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சர்வதேச குத்துச்சண்டை தரவரிசை: இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!
சனி 4, பிப்ரவரி 2023 11:23:44 AM (IST)

மாநில அளவிலான சிலம்பம்: நாலுமாவடி காமராஜ் பள்ளி மாணவா்கள் சாதனை
சனி 4, பிப்ரவரி 2023 8:07:35 AM (IST)

இந்தியாவின் டி20 உலக கோப்பை ஹீரோ ஜோகிந்தர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:23:33 PM (IST)

இந்திய அணி பாகிஸ்தானை பார்த்து பந்துவீச்சு தாக்குதலை வடிவமைத்துள்ளது - ரமீஸ் ராஜா
வெள்ளி 3, பிப்ரவரி 2023 3:48:51 PM (IST)

அகில இந்திய கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம் : சாத்தான்குளம் மாணவன் அசத்தல்!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:52:08 AM (IST)

ஷுப்மன் கில் அதிரடி சதம்: தொடரை கைப்பற்றியது இந்தியா!
வியாழன் 2, பிப்ரவரி 2023 11:00:36 AM (IST)
