» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்தது!

ஞாயிறு 7, நவம்பர் 2021 7:59:03 PM (IST)



டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்றில் குரூப்-2-ல் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது. இதில் மாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 125 ரன் வெற்றி இலக்கை நியூசிலாந்து 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து எட்டியது. இதன் மூலம்  ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி 8 புள்ளிகளுடன் அரையிறுதி போட்டிக்குள் நியூசிலாந்து அணி நுழைந்தது.  இந்தநிலையில், டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்தது. நமிபியாவை நாளை இந்தியா வென்றாலும் 6 புள்ளிகள் மட்டுமே பெறும் என்பதால் அரையிறுதிக்கு செல்ல முடியாது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory