» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்தது!
ஞாயிறு 7, நவம்பர் 2021 7:59:03 PM (IST)
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்தது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்றில் குரூப்-2-ல் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது. இதில் மாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 125 ரன் வெற்றி இலக்கை நியூசிலாந்து 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து எட்டியது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி 8 புள்ளிகளுடன் அரையிறுதி போட்டிக்குள் நியூசிலாந்து அணி நுழைந்தது. இந்தநிலையில், டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்தது. நமிபியாவை நாளை இந்தியா வென்றாலும் 6 புள்ளிகள் மட்டுமே பெறும் என்பதால் அரையிறுதிக்கு செல்ல முடியாது.