» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி கடற்பகுதியில் பலத்த சூறாவளி காற்று: 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 10:24:04 AM (IST)

தூத்துக்குடி கடற்பகுதியில் வீசி வரும் பலத்த சூறாவளி காற்று காரணமாகப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 272 விசைப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதல் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் சென்று வந்தனர். தற்போது மீன்பாடு அதிகமாக இருந்ததால் விசைப்படகு உரிமையாளர்களும் மீனவர்களும் தொழில் ரீதியாகச் சாதகமான சூழலில் இருந்து வந்தனர். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தினசரி காலை 5 மணிக்கு 272 விசைப்படகுகளில் கடலுக்குப் புறப்படும் மீனவர்கள், இரவு 9 மணிக்குக் கரை திரும்புவது வழக்கமாக இருந்தது.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 29) முதல் கடலில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரித்தது. கடல் சீற்றத்தினால் விசைப்படகுகளைச் செலுத்துவதிலும், மீன்பிடிப்பதிலும் மீனவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. இது குறித்து மீனவர்கள் விசைப்படகு உரிமையாளர்களுக்குத் தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து விசைப்படகு உரிமையாளர்கள் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினர். கடலில் தற்போது மணிக்கு 60 கிலோமீட்டர் முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், பாதுகாப்பு கருதி இன்று (ஜூன் 30) கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் இன்று தொழிலுக்குச் செல்லாததால், அவர்களின் வாழ்வாதாரம் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயில் உண்டியல் வருவாய் ரூ.2.96 கோடி: 620 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளி வசூல்!
புதன் 1, ஜூலை 2026 7:39:00 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 1 முதல் கைபேசி தடை உத்தரவு மேலும் தீவிரம்; மீறினால் பறிமுதல்!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:28:30 PM (IST)

அதிமுகவில் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறேன்: எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:19:59 PM (IST)

ஆராய்ச்சிப் பணிக்காக ரேடியோ காலர் பொருத்தப்பட்ட கழுகு மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 4:55:29 PM (IST)

தூத்துக்குடி மர அறுவை ஆலையில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள மரங்கள் சேதம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 4:34:45 PM (IST)

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர்வார்: வைகோ நம்பிக்கை - திமுக மீது கடும் விமர்சனம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 3:47:32 PM (IST)


