» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரத்திற்காக சென்ற காங்கிரஸ் வேட்பாளரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், இன்று தனது தொகுதிக்குட்பட்ட இருவப்பபுரம் பகுதியில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாகனப் பேரணியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென அவரது வாகனத்தை மறித்துச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். "கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் தொகுதிக்கு நீங்கள் செய்த நன்மைகள் என்ன? வெற்றி பெற்ற பிறகு இப்போதுதான் உங்களை இந்தப் பகுதியில் பார்க்க முடிகிறது" என்று கூறி மக்கள் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வேட்பாளரின் வாகனம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் குடிபோதையில் மினிபஸ் இயக்கிய ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை: 2 பஸ்கள் பறிமுதல்!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:28:03 AM (IST)

குடும்பத் தகராறில் பெற்ற தாயை உயிரோடு எரித்துக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:03:40 AM (IST)

கோவில்பட்டி வளர்ச்சிக்கு மதிமுக என்றும் துணை நிற்கும் : துரை வைகோ எம்.பி. உறுதி!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 8:40:09 AM (IST)

திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கவே விஜய் களமிறங்கியுள்ளார் : நயினார் நாகேந்திரன்
சனி 11, ஏப்ரல் 2026 5:47:26 PM (IST)

தமிழக உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் அதிரடி மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு!
சனி 11, ஏப்ரல் 2026 5:37:39 PM (IST)

நெல்லையில் 15 நாட்கள் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: ஏப்ரல் 17-ல் தொடக்கம்!
சனி 11, ஏப்ரல் 2026 5:13:32 PM (IST)

