» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி அருகே கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் சாம்பல்- வனவிலங்குகள் பாதிப்பு?

திங்கள் 30, மார்ச் 2026 9:41:38 AM (IST)

தென்காசி அருகே கோவிந்தப்பேரி பகுதியில் உள்ள பள்ளகாடுபட்டி பொத்தை மலையில் நேற்று திடீரெனப் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் பள்ளகாடுபட்டி பொத்தை மலைப்பகுதியில் அடர்ந்த மரங்களும், செடி-கொடைகளும் நிறைந்துள்ளன. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், நேற்று மதியம் தொடங்கிய தீ, காற்றின் வேகம் காரணமாக மலையின் மற்ற பகுதிகளுக்கும் மிக வேகமாகப் பரவியது. தீப்பொறிகள் காற்றில் பறந்து விழுந்ததால், அடுத்தடுத்த மரங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

இந்தத் தீ விபத்தில் அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் கருகிச் சாம்பலாகின. மேலும், இந்தப் பொத்தை மலைப்பகுதியில் வசித்து வந்த சிறிய வகை வனவிலங்குகள் மற்றும் ஊர்வன வகைகள் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த கடையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பகுதி என்பதால் தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும், நவீன கருவிகள் மற்றும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தித் தீ மேலும் பரவாமல் தடுக்க வனக்காவலர்கள் போராடி வருகின்றனர்.

கடும் வெயில் காரணமாக காய்ந்த இலைகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இருப்பினும், மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? என்ற கோணத்திலும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory