» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் கருப்புப் பையில் மனித மண்டையோடு : போலீஸ் விசாரணை

புதன் 11, மார்ச் 2026 3:23:59 PM (IST)

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் மின் கம்பம் அருகே கருப்புப் பை ஒன்றில் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மட்டக்கடை அருகே உள்ள பார்த்தசாரதி தெருவில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் என எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், சாலையோர மின் கம்பம் அருகே மர்மமான முறையில் கிடந்த கருப்புப் பையைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில், வடபாகம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பையைச் சோதனை செய்தனர். அப்போது பைக்குள் மனித மண்டையோடு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இது உண்மையான மனித எலும்பா? அல்லது மாந்திரீகச் செயல்களுக்காக யாராவது இங்கு கொண்டு வந்து வீசிச் சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகரக் காவல் கண்காணிப்பாளர் சுனில் சம்பவ இடத்தைப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அந்த எலும்புகள் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காகக் கொண்டு செல்லப்பட்டன. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மண்டையோடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory