» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:29:08 AM (IST)
தூத்துக்குடியில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரைச் சேர்ந்தவர் கற்பகம் (44). லேசான மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் இவர், நேற்று மதியம் தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு வந்துள்ளார். அவர் கடலில் இறங்கி குளிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக ஒரு ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்திலேயே அவர் நீரில் மூழ்கினார்.
தகவலறிந்த மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடலுக்குப் பிறகு கற்பகம் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சால்வை அணிவிப்பது போல் நடித்து தி.மு.க. நிர்வாகிக்கு கத்திகுத்து - வாலிபர் கைது!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 8:40:34 AM (IST)

ரயில் முன் பாய்ந்து புதுமாப்பிள்ளை தற்கொலை : திருமணமான ஆறே நாட்களில் சோகம்!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 8:26:41 AM (IST)

திமுக ஒருமுறை கூடக் களங்கம் இல்லாத அரசைத் தந்ததில்லை: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி!
சனி 21, பிப்ரவரி 2026 5:32:49 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!
சனி 21, பிப்ரவரி 2026 4:57:11 PM (IST)

மதுரையில் ரூ.213 கோடி செலவில் புதிய மேம்பாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சனி 21, பிப்ரவரி 2026 4:29:11 PM (IST)

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி அறவழி உண்ணாநிலை போராட்டம்
சனி 21, பிப்ரவரி 2026 3:19:10 PM (IST)

