» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒட்டப்பிடாரம் அரசு கல்லூரியில் அமைச்சர் கோவி. செழியன்ஆய்வு

திங்கள் 12, ஜனவரி 2026 11:38:10 AM (IST)


ஒட்டப்பிடாரத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கல்லூரி யூனியன் அலுவலக கட்டிடத்தில் இந்த கல்லூரி தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது கல்லூரி அலுவலகத்தில் பேராசிரியர்களின் வருகை பதிவேடு, கல்லூரியில் இயங்கி வரும் பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரியில் கட்டமைப்பு வசதிகள் குறித்து பேராசிரியர்களிடம் கேட்டறிந்தார். வகுப்பறைகளுக்கு சென்ற அவர் மாணவ, மாணவியரிடம் கலந்துரையாடினார். அப்போது கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவ மாணவியருக்கு அரசு வழங்கிவரும் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினார். விரைவில் புதிய கட்டிடத்திற்கு கல்லூரியை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் பார்வையிட்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், சண்முகையா எம்.எல்.ஏ, கல்லூரி முதல்வர் கிரேசா ஜேக்கப், தாசில்தார் சண்முகவேல், அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory