» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி: அர்ச்சகர் மீது நடவடிக்கை!!

செவ்வாய் 23, டிசம்பர் 2025 8:10:44 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதாக அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ரூ. 100 சிறப்பு தரிசனக் கட்டணச் சீட்டு மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், பக்தர்களிடம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராஜா அய்யர் மகன் அர்ச்சகர் பிரமோத் என்பவர் ரூ. 500, ரூ. 1,000-க்கு தரிசனம் என்று பேரம் பேசிய காணொலி டிச. 16ஆம் தேதி வெளியானது.

இதையடுத்து, கோயில் இணை ஆணையரால் பரிந்துரை செய்யப்பட்டு, தக்காரின் மறு உத்தரவு வரும் வரை, அவர் கோயிலில் பூஜை காரியங்கள், கைங்கர்யங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற மோசடிகளில் ஈடுபடுவோரை நம்பி பக்தர்கள் ஏமாறாமல், கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைகளை மட்டுமே பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory