» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் : கூடுதல் கோட்ட மேலாளர் தகவல்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:56:21 AM (IST)

திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் என மதுரை கூடுதல் கோட்ட மேலாளர் எல். நாகேஷ்வர ராவ் தெரிவித்தார்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை, தெற்கு ரயில்வே, மதுரை கோட்ட மேலாளர் நாகேஷ்வர ராவ் நேற்று ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரை ரயில் நிலையங்களில் நடைமேடைகளை விரிவுபடுத்தும் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.
அம்ரித் பாரத் திட்டப் பணிகள் 2026 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். வந்தே பாரத் ரயில் சேவையை திருச்செந்தூர் வரை நீட்டிப்பதற்கு பயணிகள் வைத்த கோரிக்கை பரிசீலனை செய்யப்படும். திருச்செந்தூர்-சென்னை நேர்வழி ரயில் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாய்மைப் பருவத்தை தள்ளிப்போடாதீர்கள்: அமைச்சர் பி. கீதா ஜீவன் அறிவுரை!
திங்கள் 2, மார்ச் 2026 5:47:32 PM (IST)

தமிழகம் வளர்ச்சியில்லை, வீழ்ச்சியில்தான் உள்ளது: திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் சாடல்
திங்கள் 2, மார்ச் 2026 5:34:47 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் சுகுமார் மனுக்களைப் பெற்றார்
திங்கள் 2, மார்ச் 2026 5:25:10 PM (IST)

விவசாய நிலங்களை அழித்து 4 வழிச்சாலை அமைப்பதா? கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!
திங்கள் 2, மார்ச் 2026 12:30:21 PM (IST)

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது : 8.27 லட்சம் பேர் எழுதுகின்றனர்
திங்கள் 2, மார்ச் 2026 10:46:46 AM (IST)

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி: மதுரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
திங்கள் 2, மார்ச் 2026 8:24:46 AM (IST)

