» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லை அருகே பரபரப்பு!!

புதன் 3, டிசம்பர் 2025 8:24:25 AM (IST)

நெல்லை அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நெல்லை அருகே பேட்டையை அடுத்த சுத்தமல்லி வ.உ.சி. நகர் அல்மதீனா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சக்கரியா. இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் முகம்மது சாதிக் (28). இவர் வீட்டின் அருகிேலயே சிறிய அளவிலான ஓட்டல் நடத்தி வருகிறார். மற்ற 2 பேரும் கல்லூரியிலும், ஐ.டி.ஐ.யிலும் படித்து வருகிறார்கள். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் வியாபாரத்தை முடித்து விட்டு முகம்மது சாதிக் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தூங்கினார்கள். நேற்று அதிகாலையில் முகம்மது சாதிக் எழுந்து வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது மாடிப்படிகளில் கண்ணாடி பாட்டில் துண்டுகள் உடைந்து சிதறிக்கிடந்தன. மேலும் படியையொட்டிய சுவரில் தீப்பிடித்து எரிந்த கரும்புகையும் படிந்திருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து சுத்தமல்லி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் ஆனந்த ஆரோக்கியசாமி, சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, தடயவியல் நிபுணர் ஆனந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தடயவியல் நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். சம்பவ இடத்தை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

அப்போது, முகம்மது சாதிக் வீட்டில் நள்ளிரவில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்று இருப்பது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். தொழில் போட்டி அல்லது முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். நெல்லை அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory