» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் ஊஞ்சல் திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:38:53 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் கள்ளபிரான் சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
நவதிருப்பதி கோவில்களில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் 5 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் திருவிழா நடைபெற்று வருகிறது. இத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், காலை 10 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடந்தது.
மாலை 6 மணிக்கு சாயரட்சை, மாலை 6.30 மணிக்கு உற்சவர் கள்ளபிரான் சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து சாத்துமுறை நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் பஞ்சாயத்து தலைவரை கொல்ல முயற்சி: ஆட்சியரிடம் புகார்!
திங்கள் 3, நவம்பர் 2025 12:55:06 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி : தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 3, நவம்பர் 2025 12:03:02 PM (IST)

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் குடும்பம் தலையீடு : செங்கோட்டையன் குற்றச்சாட்டு
திங்கள் 3, நவம்பர் 2025 11:49:10 AM (IST)

அரசு பள்ளி வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு : 3 மாணவர்கள் கைது
திங்கள் 3, நவம்பர் 2025 8:39:47 AM (IST)

எஸ்ஐஆர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில் வழக்கு : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
ஞாயிறு 2, நவம்பர் 2025 4:27:24 PM (IST)


.gif)