» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொலை வழக்கில் தந்தை - மகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 8:00:18 PM (IST)
மாசார்பட்டி பகுதியில் நடந்த கொலை வழக்கில் தந்தை - மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி பகுதியைச் சேர்ந்த சப்பானிமுத்து மகன் முத்து முனியசாமி (55/2013) என்பவரை கடந்த 14.11.2013 அன்று தாப்பாத்தி பகுதியைச் சேர்ந்த கரும்பன் மகன் சுப்பையா (60/25), சுப்பையாவின் மகன்கள் மாரிமுத்து (36/25), ராஜ்குமார் (34/25), மகள் அந்தோணியம்மாள் (37/25), மனைவி மாரியம்மாள் (59/25) மற்றும் உறவினர் போலம்மாள் (77/25) ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியும் அதை தடுக்க வந்த முத்துமுனியசாமியின் மகன் சேர்மக்கனி (36/25) என்பவரையும் தாக்கியனர். இதில் முத்துமுனியசாமி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து மசார்பட்டி காவல் நிலைய போலீசார் கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்படி 6பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை நீதிபதி தாண்டவன் இன்று (14.10.2025) சுப்பையா மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் தலா ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூபாய் 10,000/- அபராதம் விதித்தும் மற்ற 4 எதிரிகளை விடுதலை செய்தும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ் அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் மாரிச்சாமி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 20 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டணி கட்சிகள் தேர்தலுக்குப் பின் தங்கள் நிறத்தை வெளிப்படுத்துகின்றன: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
வெள்ளி 12, ஜூன் 2026 12:23:57 PM (IST)

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 12:09:08 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)

குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடியில் சிறப்பு திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 10:23:33 AM (IST)

அரசியலில் நுழைய வேண்டிய நிலைக்கு வந்துள்ளேன் - நடிகர் ராகவா லாரன்ஸ்!
வெள்ளி 12, ஜூன் 2026 10:15:11 AM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா கடத்திய இளம்பெண் உள்பட 2பேர் கைது: 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!
வெள்ளி 12, ஜூன் 2026 8:28:33 AM (IST)


