» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து செய்ததற்கான அரசாணை வெளியீடு: மதிப்பெண் சான்றிதழ் நடைமுறை மாற்றம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 8:41:21 AM (IST)
பிளஸ்-1 பொதுத் தேர்வு ரத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நடைமுறையையும் மாற்றி அறிவித்துள்ளது.
2017-18-ம் கல்வியாண்டு முதல் பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டு. அதன்படி, கடந்த கல்வியாண்டு வரை அதாவது 8 ஆண்டுகளாக பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 7 முதல் 8 லட்சம் வரையிலான மாணவ-மாணவிகள் எழுதி வந்தனர். இந்தநிலையில் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை-2025-ல், பிளஸ்-1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை அரசாணையாக அதை வெளியிட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: 2025-26-ம் கல்வியாண்டு முதல் பிளஸ்-1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. 2025-26-ம் கல்வியாண்டு முதல் பிளஸ்-1 வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு 2017-18-ம் கல்வியாண்டுக்கு முன்னர் இருந்த நடைமுறையை பின்பற்றி தேர்வு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.
2025-26-ம் கல்வியாண்டில் இருந்து பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையை மாற்றி, பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதிய பின்னர் பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண்களை மட்டும் உள்ளடக்கிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த அரசு தேர்வுகள் இயக்குனருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும் ஏற்கனவே பிளஸ்-1 வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மட்டும் பிளஸ்-1 வகுப்பு பொதுத் தேர்வினை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது, மார்ச் 2030 வரையில் தொடர்ந்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குனருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம்: வேல்முருகன் எச்சரிக்கை
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:51:15 PM (IST)

தீபாவளி சிறப்பு ரயில்களில் டிக்கெட் விற்று தீர்ந்தது: ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:29:48 PM (IST)

ராமதாஸ் காலத்தில் பாமகவுக்கு இப்படி ஒரு சோதனை : ஜி.கே.மணி வேதனை
செவ்வாய் 14, அக்டோபர் 2025 12:50:01 PM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது: கரூர் துயர சம்பவத்திற்கு இரங்கல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:04:25 AM (IST)

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 16-ம்தேதி தொடங்கும் : வானிலை ஆய்வாளர்கள் தகவல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:01:38 AM (IST)
