» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் சான்றிதழ் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் இன்று தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக Internship முடித்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், சான்றிதழ் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு Internship (பணி அனுபவ பயிற்சி) தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டது. இந்த பயிற்சியின் போது தொழில் முனைவோர்களுக்கு தேவையான அரசு திட்டங்களை பற்றி மற்றும் புத்தாக்கத்திற்காக வழங்கி வரும் திட்டங்களை பற்றி மாணவர்கள் தெரிந்து கொண்டு பயன்பெற்றனர்.
முதல் கட்டமாக, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, முகமது இஸ்மாயில் ஐடிஐ கல்லூரியை சார்ந்த 7 மாணவ, மாணவியர்களுக்கு Internship பயிற்சி முடித்தற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி, பாராட்டினார்கள். இந்நிகழ்வில், மாவட்ட தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன திட்ட மேலாளர் மு.சிவ பாரதி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

பொன்முடி மீதான வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!
வெள்ளி 4, ஜூலை 2025 5:23:45 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய்: செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
வெள்ளி 4, ஜூலை 2025 5:06:04 PM (IST)

காதலர்களை பார்த்த சிறுவன் கொடூர கொலை: கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 4:27:54 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை: கணவர் வெறிச்செயல்!!
வெள்ளி 4, ஜூலை 2025 11:36:36 AM (IST)
