» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆழ்வார்திருநகரி ஆழ்வார் கோவிலில் 9 கருட சேவை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

வெள்ளி 6, ஜூன் 2025 8:17:25 AM (IST)



ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் 9 கருட சேவை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதா் ஆழ்வார் கோவில், நம்மாழ்வாரின் அவதார தலமாகும். இக்கோவிலில் நம்மாழ்வாரின் அவதார தினமான வைகாசி விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் ஐந்தாம் நாளில் சுவாமி நம்மாழ்வார், நவ திருப்பதி பெருமாள்களுக்கு ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் முன்பு மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் இரவு 11 மணியளவில் 9 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளும் கருட சேவை நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்தன், தொலைவில்லிமங்கலம் செந்தாமரைக்கண்ணன், இரட்டை திருப்பதி தேவபிரான், பெருங்குளம் மாயக்கூத்தன், தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான் ஆகியோர் கருட வாகனங்களிலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். அதன் பின்னர் வீதிஉலா வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 8-ம் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. 9 -ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory