» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை பல்கலை. உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது வழக்குப்பதிவு!
புதன் 30, ஏப்ரல் 2025 10:44:19 AM (IST)
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உதவி பேராசிரியை ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாநில மகளிர் ஆணையம் மற்றும் உயர்கல்வி துறை உள்ளிட்ட துறைகளுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த புகார் மனுவில், அதே பல்கலைக்கழகத்தில் தாம் முனைவர் பட்டத்திற்கு படித்துக் கொண்டிருந்த போது, பேராசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தற்போது அதே பல்கலைக்கழகத்தில் தாம் பணியாற்றும் போது அந்த பேராசிரியர் மீண்டும் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மாநில மகளிர் உரிமைகள் ஆணையம் மற்றும் உயர்கல்வி துறை தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த விசாரணையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என தேசிய மகளிர் உரிமைகள் ஆணையம் கூறியது. அதன் அடிப்படையில், கல்லூரி உள்விவகார குழு சார்பில் விசாரணை நடத்த துணை வேந்தர் உத்தரவு பிறப்பித்தார். பல்கலைக்கழகத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளி வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு : 3 மாணவர்கள் கைது
திங்கள் 3, நவம்பர் 2025 8:39:47 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் ஊஞ்சல் திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:38:53 AM (IST)

எஸ்ஐஆர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில் வழக்கு : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
ஞாயிறு 2, நவம்பர் 2025 4:27:24 PM (IST)

ராஜராஜ சோழன் சதய விழா: பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:40:47 AM (IST)

கோவில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி: பெற்றோர் வீட்டில் தனியாக விட்டுச்சென்றதால் பரிதாபம்!!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:37:50 AM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)


.gif)