» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் 9 வழித்தடங்களில் புதிய மினி பேருந்துகள்: ஆட்சியர் ஆணை வழங்கினார்!
வெள்ளி 21, மார்ச் 2025 5:51:06 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 வழித்தடங்களில் புதிய மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 28 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. அதனடிப்படையில், 189 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 9 வழித்தடங்களுக்கு தலா ஒரு விண்ணப்பம் மட்டும் வரப்பெற்றதால் அவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 9 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.
மீதமுள்ள 19 வழித்தடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 26.03.2025 அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் 180 விண்ணப்பங்களுக்கான குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு, 19 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயங்குவதற்கான ஆணைகள் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், துணை போக்குவரத்து ஆணையர் (திருநெல்வேலி) என்.ரவீசந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (திருநெல்வேலி) என்.ஆர்.சரவணன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் டி.ராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 1:14:38 PM (IST)

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST)

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)


.gif)