» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் 9 வழித்தடங்களில் புதிய மினி பேருந்துகள்: ஆட்சியர் ஆணை வழங்கினார்!
வெள்ளி 21, மார்ச் 2025 5:51:06 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 வழித்தடங்களில் புதிய மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 28 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. அதனடிப்படையில், 189 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 9 வழித்தடங்களுக்கு தலா ஒரு விண்ணப்பம் மட்டும் வரப்பெற்றதால் அவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 9 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.
மீதமுள்ள 19 வழித்தடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 26.03.2025 அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் 180 விண்ணப்பங்களுக்கான குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு, 19 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயங்குவதற்கான ஆணைகள் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், துணை போக்குவரத்து ஆணையர் (திருநெல்வேலி) என்.ரவீசந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (திருநெல்வேலி) என்.ஆர்.சரவணன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் டி.ராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மானூர் அருகே நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகு : ஆட்சியர் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஏப்ரல் 2025 5:10:03 PM (IST)

நடிகர் சங்கம் பதவி நீட்டிப்புக்கு எதிரான வழக்கு: கார்த்தி, விஷால் பதிலளிக்க உத்தரவு
புதன் 30, ஏப்ரல் 2025 4:30:13 PM (IST)

கடமை, கண்ணியம், சுய ஒழுக்கம் முக்கியம்: த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!
புதன் 30, ஏப்ரல் 2025 12:01:39 PM (IST)

2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
புதன் 30, ஏப்ரல் 2025 11:30:02 AM (IST)

பக்தர்களுக்கு அன்னதானம், மோர் வழங்க பதிவுச் சான்றிதழ் பெறுவது அவசியம்: ஆட்சியர்!
புதன் 30, ஏப்ரல் 2025 10:50:22 AM (IST)

நெல்லை பல்கலை. உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது வழக்குப்பதிவு!
புதன் 30, ஏப்ரல் 2025 10:44:19 AM (IST)
