» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜாமின் கையெழுத்து போட வந்த ரவுடி வெட்டிக் கொலை: காவல்நிலையம் அருகே பயங்கரம்!
வெள்ளி 21, மார்ச் 2025 12:42:09 PM (IST)
காரைக்குடியில் காவல்நிலையத்தில் ஜாமின் கையெழுத்திட சென்ற ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (23) இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி இவர் மீது பல்வேறு வழக்குகள், பல்வேறு காவல்நிலையங்களில் உள்ளது. கடந்த ஆண்டு கஞ்சா சிக்கிய வழக்கில் சிறை சென்று பிணையில் வெளிவந்தார். பிணையில் வந்த அவர் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போடுவதற்காக நண்பர்களுடன் வந்தவர்.
ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு அங்கிருந்து காவல் நிலையத்தைவிட்டு வரும் போது இவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் இவரை துரத்தியது. பைக்கில் முன்னாள் சென்றவர்களை காரில் இடித்து அங்கிருந்து தள்ளிவிட்டு அங்கிருந்து 100ஆடி சாலையில் ஓடிய நபரை மர்ம கும்பல் ஒன்று ரத்த வெள்ளத்தில் அவரை சரமாரியாக வெட்டி காரில் தப்பி சென்றது. இச்சம்பவம் காரைக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

ஓபிஎஸ் தலைமையில் டிச.15ல் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
சனி 13, டிசம்பர் 2025 11:52:30 AM (IST)


.gif)