» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக்கில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு மீட்பு : தூத்துக்குடியில் பரபரப்பு!!
வெள்ளி 11, அக்டோபர் 2024 7:16:51 PM (IST)

தூத்துக்குடியில் ஒர்க்ஷாப்பில் நிறுத்தியிருந்த பைக்கில் நல்ல பாம்பு பதுங்கி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மீனாட்சிபுரம் அரவிந்த் கண் மருத்துவமனை எதிரில் உள்ள இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் நிறுத்தியிருந்த வாகனத்தின் உள்ளே பாம்பு ஒன்று இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து அங்கு வந்த தூத்துக்குடி தீயணைப்புத் துறையினர், பைக்கின் பாகங்களை கழற்றி உள்ளே இருந்த சுமார் 2 அடி நல்ல நீளமுள்ள பாம்பை பிடித்தனர்.
பின்னர் அந்த பாம்பை, வனப் பகுதியில் விட நடவடிக்கை எடுத்தனர். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பாம்புகள் சூடான இடங்களில் தஞ்சம் அடைவது இயல்பு. பைக் இன்ஜின் பகுதி சூடாக இருப்பதால் பாம்புகள் பைக்கில் புகுந்து கொள்ளும். அப்படித்தான் பைக்கில் அந்தப் பாம்பு பதுங்கியுள்ளது. ஆகவே, பைக்கை நிறுத்துபவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் குளம் போல மாறிய அரசுப் பள்ளி : பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம்
வெள்ளி 24, அக்டோபர் 2025 5:15:54 PM (IST)

வங்கக்கடலில் புயல்: சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:48:53 PM (IST)

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:17:41 PM (IST)

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்தது : சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:54:33 PM (IST)

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)

தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு : யு.டி.ஐ.எஸ்.இ. தகவல்
வெள்ளி 24, அக்டோபர் 2025 11:55:14 AM (IST)


.gif)