» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீசார் விசாரணை
ஞாயிறு 23, ஜூன் 2024 8:48:14 AM (IST)
புளியங்குடியில் பள்ளிஆசிரியை வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் ஆசிரியர் தம்பதி பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றனர். மதியம் ஆசிரியை உமாதேவி அரைநாள் விடுமுறை எடுத்து கொண்டு, பள்ளியில் இருந்து வீடு திரும்பினார். மாலையில் பள்ளி முடிந்ததும் ஆசிரியர் ரவிகுமார் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் உமாதேவி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கியவாறு கிடந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிகுமார் கதறி அழுதார். இதுகுறித்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த ஆசிரியை உமாதேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
ஆசிரியை உமாதேவி பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புளியங்குடியில் ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மானூர் அருகே நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகு : ஆட்சியர் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஏப்ரல் 2025 5:10:03 PM (IST)

நடிகர் சங்கம் பதவி நீட்டிப்புக்கு எதிரான வழக்கு: கார்த்தி, விஷால் பதிலளிக்க உத்தரவு
புதன் 30, ஏப்ரல் 2025 4:30:13 PM (IST)

கடமை, கண்ணியம், சுய ஒழுக்கம் முக்கியம்: த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!
புதன் 30, ஏப்ரல் 2025 12:01:39 PM (IST)

2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
புதன் 30, ஏப்ரல் 2025 11:30:02 AM (IST)

பக்தர்களுக்கு அன்னதானம், மோர் வழங்க பதிவுச் சான்றிதழ் பெறுவது அவசியம்: ஆட்சியர்!
புதன் 30, ஏப்ரல் 2025 10:50:22 AM (IST)

நெல்லை பல்கலை. உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது வழக்குப்பதிவு!
புதன் 30, ஏப்ரல் 2025 10:44:19 AM (IST)
