» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொலை மிரட்டல் வழக்கில் சம்மந்தப்பட்ட 3பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
சனி 22, ஜூன் 2024 9:49:22 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மிரட்டல் வழக்கில் சம்மந்தப்பட்ட 3பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 12.05.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேரகுளம் சோதனைச் சாவடி அருகே வந்த ஒருவரிடம் தகராறு செய்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் செல்வம் (43), ஸ்ரீவைகுண்டம் வெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்களான முருகேசன் மகன் அருன் (எ) அருணாச்சலம் (27) மற்றும் இசக்கிமுத்து மகன் கண்ணன் (எ) கருப்பசாமி (30) ஆகியோரை சேரகுளம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை மேற்படி 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மும்மொழி கொள்கை விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:48:24 PM (IST)

மூதாட்டியை கட்டி போட்டு 10 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்கள் : போலீஸ் தீவிர விசாரணை!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:44:32 PM (IST)

பா.ஜனதா ஆட்சி செய்தால் ஏழை எளிய மக்கள் வாழவே முடியாது: நெல்லையில் ப.சிதம்பரம் பேச்சு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:33:34 PM (IST)

ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் சொத்து ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:47:55 AM (IST)

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் அதிபருக்கு அரிவாள் வெட்டு : 3பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:39:59 AM (IST)

பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வர், மாணவர் பலி; மேலும் ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:24:20 AM (IST)
