» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சித்திரை பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கம்.
செவ்வாய் 23, ஏப்ரல் 2024 3:25:56 PM (IST)
திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ஏப்ரல் 24ந் தேதி புதன்கிழமை சித்திரை பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:40 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06853 பயணிகள் சிறப்பு ரயில் காலை 8:15 மணிக்கு திருச்செந்தூர் வந்தடைகிறது. காலை 11:25 மணிக்கு திருநெல்வேலியில் புறப்படும் வண்டி எண் 06855 பயணிகள் சிறப்பு ரயிலானது மதியம் 1 மணிக்கு திருச்செந்தூர் வந்தடைகிறது.
மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06854 பயணிகள் சிறப்பு ரயில் காலை 10:50 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது.மேலும் ஒரு சிறப்பு பயணிகள் ரயில் மதியம் 1:30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு மதியம் 3 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாத்தான்குளத்தில் நின்று செல்லும். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், காஞ்சனவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் ஹாலத், இந்த பெட்டியில் 5 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு லக்கேஜ் கம் பிரேக் வேன் பெட்டிகள் இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.