» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சித்திரை பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கம்.

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 3:25:56 PM (IST)

திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ஏப்ரல் 24ந் தேதி புதன்கிழமை சித்திரை பவுர்ணமி சிறப்பு ரயில்கள்  இயக்கப்படுகின்றன என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:40 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06853  பயணிகள் சிறப்பு ரயில் காலை 8:15 மணிக்கு திருச்செந்தூர் வந்தடைகிறது. காலை 11:25 மணிக்கு திருநெல்வேலியில் புறப்படும் வண்டி எண் 06855 பயணிகள் சிறப்பு ரயிலானது மதியம் 1 மணிக்கு திருச்செந்தூர் வந்தடைகிறது.

மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06854 பயணிகள் சிறப்பு ரயில் காலை 10:50 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது.மேலும் ஒரு சிறப்பு பயணிகள் ரயில் மதியம் 1:30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு மதியம் 3 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாத்தான்குளத்தில் நின்று செல்லும். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், காஞ்சனவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் ஹாலத், இந்த பெட்டியில் 5 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு லக்கேஜ் கம் பிரேக் வேன் பெட்டிகள் இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory