» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறையில் சமையலர் பணியிடம்: மார்ச் 25 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

செவ்வாய் 12, மார்ச் 2024 8:26:07 PM (IST)

நாங்குநேரி தனிக் கிளைச் சிறையில் காலியாக உள்ள சமையலர் பணியாளர் பணியிடத்திற்கு மார்ச் 25 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது தொடர்பாக பாளையங்கோட்டை மத்தியசிறை, சிறைக் கண்காணிப்பாளர் கோ.பா.செந்தாரைக்கண்ணன் வெளியிட்ட அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்தியசிறை கட்டுப்பாட்டிலுள்ள நாங்குநேரி தனிக் கிளைச் சிறையில் காலியாக உள்ள சமையலர் பணியாளர் பணியிடத்திற்கு வயது வரம்பு General Turn / Non-Priority -1 Post --18 Years-32 Years/OC, 18 Years -34 Years/BC & MBC, 18 Years -37 Years/SC & ST. கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி, 2 வருடத்திற்கு குறையாமல் சமையலர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பம், சாதிச் சான்று நகல், ஆதார் அட்டை நகல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் அதன் விவரம் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.25.03.2024. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி கண்காணிப்பாளர் அலுவலகம், மத்தியசிறை, பாளையங்கோட்டை -627 002. மேற்கண்ட தகுதிகள் கொண்ட நபர்கள் (ஆண்) உரிய விவரங்களுடன் விண்ணப்பிக்குமாறு  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory