» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை விவகாரம்: பேராசிரியர் பணியிடை நீக்கம்!

புதன் 29, நவம்பர் 2023 11:30:33 AM (IST)

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்ட பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. அதிலும் குறிப்பாக, இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மட்டும் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதில் கடந்த மார்ச் மாதம் ஆராய்ச்சி மாணவர் சச்சின்குமார் ஜெயின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தொடர் தற்கொலை சம்பவத்துக்கும், ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை விவகாரத்துக்கும் நீதி கேட்டு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை சம்பவம் தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் விசாரணை குழுவை அமைத்தது. இந்த குழுவில் முன்னாள் டி.ஜி.பி. திலகவதி, ஓய்வுபெற்ற அதிகாரிகள் சபிதா, கன்னேகி பாக்கியநாதன், பேராசிரியர் ரவீந்திர கெட்டு, மாணவர் அமல் மனோகரன் ஆகியோர் இடம்பெற்றனர்.

விசாரணை அறிக்கை கல்வி நிறுவனத்தின் நிர்வாகக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில், ஆராய்ச்சி மாணவர் சச்சின்குமார் ஜெயின் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்ட பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory