» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விபத்தில் மூளைச் சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்

புதன் 22, நவம்பர் 2023 8:24:04 AM (IST)

திருச்செந்தூர் அருகே சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த பள்ளி ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறை சேர்ந்த தங்கபெருமாள் மகன் சதீஷ் (33). இவர் பணிக்கநாடார் குடியிருப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 6 மாத ஆண்குழந்தை உள்ளது. வழக்கமாக பள்ளிக்கு பள்ளி வாகனத்தில் சென்று வருவார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் பள்ளி முடிந்து பரமன்குறிச்சி வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் வந்தபோது, மாடு குறுக்கே வந்துள்ளது. இதில் நிலை தடுமாறிய சதீஷ் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். 

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், விபத்தில் ரத்த கசிவு ஏற்பட்டு மூளை செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory