» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சனி 3, ஜூன் 2023 12:12:32 PM (IST)

ரயில் விபத்தில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒடிசா கோர ரயில் விபத்து நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் ஒடிசாவுக்கு செல்கின்றனர். அவர்கள் அங்கு இருந்து களப்பணி ஆற்றுவர்.மூன்று ரயில்கள் மோதி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொள்வதற்கும், மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தேன்.
ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 8:33:24 PM (IST)

ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் திருடிய வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 4:59:58 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட குறைவான மழை பொழிவு : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 4:59:22 PM (IST)

பெரியார் - மணியம்மையார் குறித்த பேச்சுக்கு வருந்துகிறேன்” - அமைச்சர் துரைமுருகன்
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:57:49 PM (IST)

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்தபோது 2 விசாரணை கைதிகள் தப்பி ஓட்டம்: நெல்லையில் பரபரப்பு!!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:46:54 PM (IST)

கோவையில் மீண்டும் போட்டியிடுவேன் : மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:42:43 PM (IST)
