» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாவட்ட நலன் வேண்டி ஏப்.5ம் தேதி மேல்மருவத்தூரில் பங்குனி பௌர்ணமி விழா!

செவ்வாய் 28, மார்ச் 2023 2:52:03 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட நலன் வேண்டி  மேல்மருவத்தூரில் ஏப்ரல் 5ம் தேதி பங்குனி பௌர்ணமி பூஜை விழா நடைபெறுகிறது. 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தூத்துக்குடி மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சார்பில் ஏப்ரல் 5ம் தேதி பங்குனி பௌர்ணமி பூஜை நடக்கிறது. மழைவளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், தொழில்வளம் பெருகவும், திருமணப்பேறு, குழந்தைபேறு வேண்டுதல்கள் நிறவேறவும், நோய் நொடியின்றி மக்கள் நலமுடன் வாழவும் வேண்டியும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது. 

சித்தர் பீடம் வருகைதரும் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் நலன் வேண்டி மகளிர் கலந்து கொள்ளும் மாபெரும் விளக்கு பூஜை நடைபெறுகிறது. விளக்கு பூஜையை ஆன்மிக இயக்க தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார் தீபம் ஏற்றி தொடங்கி வைக்கிறார்.

இதனையடுத்து வெள்ளித்தேர், தங்கத்தேரை தூத்துக்குடி பக்தர்கள் இழுக்கின்றனர். காலை 6 மணியிலிருந்து இரவு 8மணி வரை சித்தர் பீடத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு இனிப்புடன் கூடிய அன்னதானம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் சக்தி.ஆர்.முருகன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் வழிபாட்டு மன்றங்கள், சக்திபீட நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory