» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சூறாவளி காற்றில் 5ஆயிரம் வாழைகள் சேதம்: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
செவ்வாய் 28, மார்ச் 2023 11:43:40 AM (IST)
பேய்க்குளம் பகுதியில் சூறாவளி காற்றில் 5000க்கு மேற்பட்ட வாழைகள் சேதமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பகுதியில் கடந்த 23ஆம்தேதி பெரும் சூறாவளி காற்று வீசியதில் மீரான்குளம், கோமானேரி. கட்டாரிமங்கலம், கருங்கடல், ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் காற்றில் சரிந்து சேதமானது. அப்பகுதியில் சுமார் 5000க்கு மேற்பட்ட வாழைகள் சரிந்து விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மரங்களும் சேதமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
ஆதலால் விவசாயிகளின் நலன் கருதி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரண தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ, ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் , சென்னை தலைமை செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினார். இதனைபோல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிக்கும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அனுப்பியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக சார்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி : நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
செவ்வாய் 13, மே 2025 12:41:47 PM (IST)

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்தில் 97.39 சதவீதம் தேர்ச்சி!
செவ்வாய் 13, மே 2025 12:28:32 PM (IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 13, மே 2025 11:03:28 AM (IST)

தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மிக மோசம்: சிபிஎம் நிர்வாகி உ.வாசுகி பேட்டி!
செவ்வாய் 13, மே 2025 10:48:07 AM (IST)

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

தமிழகத்தில் மே 14, 15ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
திங்கள் 12, மே 2025 4:57:09 PM (IST)
