» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6பேர் உயிரிழந்த சம்பவம்: சமக தலைவர் சரத்குமார் இரங்கல்!
புதன் 5, அக்டோபர் 2022 11:11:20 AM (IST)
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6பேர் உயிரிழந்த துயர சம்பவத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விழாக்காலங்களை மகிழ்வுடன் கொண்டாட, விரும்பி, தூத்துக்குடியில் இருந்து 52 பேர் ஆன்மீக சுற்றுலாவிற்கு புறப்பட்டு சென்ற போது கொள்ளிடம் பகுதியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 பேருக்கு நேர்ந்த இத்துயரச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமான பரிதாபத்திற்குரியது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம், இது போன்ற விபரீதங்கள் நிகழ்ந்து கொண்டே இருப்பதற்கு தமிழக் அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஆற்று நீரோட்டம் சீரற்று இருக்கும் சமயங்களில் குளிப்பதற்கு தடை விதித்தும், அதிகாரிகள் அதனை கண்காணித்து இனி இதுபோன்ற விபரீதங்கள் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். மேலும், கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித் தாய்க்கு இபிஎஸ் ஆறுதல்!
புதன் 2, ஜூலை 2025 5:46:53 PM (IST)

அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது ரூ.16 லட்சம் பணமோசடி புகார்!
புதன் 2, ஜூலை 2025 4:27:26 PM (IST)

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
புதன் 2, ஜூலை 2025 12:48:55 PM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை!!
புதன் 2, ஜூலை 2025 12:41:25 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம் : எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
புதன் 2, ஜூலை 2025 10:47:05 AM (IST)
