» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாண்டியன், வைகை, பொதிகை ரயில் கால அட்டவணையில் மாற்றம் : ஏப்ரல் 14 முதல் அமல்

செவ்வாய் 12, ஏப்ரல் 2022 8:18:11 PM (IST)

சிலம்பு மற்றும் அந்தியோதயா விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, அவற்றின் கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை செல்லும் பாண்டியன், வைகை விரைவு ரயில்கள், செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயில் ஆகியவற்றின் கால அட்டவணையிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

 ஏப்ரல் 14 முதல் 

1) மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் (12638) மதுரையிலிருந்து இரவு 09.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 09.35 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 09.55, 10.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 10.00, 10.15 மணிக்கு புறப்பட்டு  அதிகாலை 05.05 மணிக்கு பதிலாக அதிகாலை 05.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

2) சென்னை - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (12661) ஏப்ரல் 14 முதல் திண்டுக்கல், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 03.10, 05.15, 05.35, 05.42, 5.58, காலை 06.12, 06.35, 06.48, 07.05, 07.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 03.05, 05.10, 05.30, 05.37, 05.53, காலை 06.07, 06.30, 06.43, 07.00, 07.30 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் வழக்கமான நேரமான காலை 08.15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

3) மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) ஏப்ரல் 14 முதல் மதுரையிலிருந்து காலை 07.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.10 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் சோழவந்தான் ரயில் நிலையத்திலிருந்து காலை 07.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.30 மணிக்கு புறப்படும்.

4) மதுரை - பழனி விரைவு சிறப்பு ரயில் (06480) ஏப்ரல் 14 முதல் மதுரையிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.25 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் கூடல் நகர், சமயநல்லூர், சோழவந்தான் ரயில் நிலையங்களிலிருந்து முறையே காலை 07.30, 07.38, 07.48 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.35, 07.44, 07.52 மணிக்கு புறப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory