» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம்: இலங்கையை கண்டிக்க வேண்டும் - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
செவ்வாய் 25, ஜனவரி 2022 4:30:02 PM (IST)
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை ஏலம் விட இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள மீட்க இயலாத 125 தமிழக மீன்பிடிப் படகுகளை அப்புறப்படுத்துவதற்கான செயல்முறை மற்றும் வழிமுறைகளை இறுதி செய்வதற்கு ஒரு தொழில்நுட்பக் குழுவை இலங்கைக்கு அனுப்புமாறு மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டது. அதனடிப்படையில் மீன்பிடிப் படகுகளை ஆய்வு செய்து, அப்புறப்படுத்துவதை மேற்பார்வையிடவும், விற்பனை வருவாயை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பவும், தமிழகத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் கொள்முதல் செய்வோரை நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, அவர்களின் இலங்கை பயண விவரங்களையும் மத்திய வெளியுறவுத் துறைக்குத் தெரிவித்துள்ளது.
இத்தகைய சாதகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத் துறை, இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீன்பிடிப் படகுகளை ஏலம் விடுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதற்கு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்துள்ளதாக இலங்கை மற்றும் தமிழ்நாட்டிலுள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்திய அரசுடன் இலங்கை அரசு முறையாக கலந்தாலோசனை மேற்கொள்ளாமல் ஏலத்தை நடத்த அவசரம் காட்டுவது, வாழ்வாதாரத்தை இழந்த தமிழக ஏழை மீனவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இந்திய தூதரகமும், தமிழக அரசும் மேற்கொண்டுவரும் முயற்சிகளை பாதிக்கும்.
இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு பல்வேறு துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் அனைத்தும் இலங்கையிலுள்ள பல்வேறு நீதிமன்றங்களால் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே விடுவிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழக மீனவர்களின் படகுகளை, எவ்வித சட்டபூர்வமான உரிமையும் இல்லாத இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத் துறை ஏலம் விட உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தைத் திரும்பப் பெற வேண்டும். இந்திய அரசின் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளைக் கொண்டு இலங்கை அரசுக்கு இது தொடர்பாக இந்திய அரசின் மறுப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இந்தச் சூழ்நிலையில், 2018 ஆம் ஆண்டுக்கு முன் கைப்பற்றப்பட்ட மற்றும் பழுதுபார்க்க இயலாதெனக் கருதப்படும் 125 தமிழகப் படகுகளை ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர வேண்டும். இலங்கை கடற்படையினரால் 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை முன்கூட்டியே விடுவிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்விகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிடவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து போராட்டம் : காங்கிரஸ் கட்சிக்கு குஷ்பு சவால்!
வியாழன் 19, மே 2022 5:30:59 PM (IST)

நெல்லை கல்குவாரி விபத்து: கனிம வளத்துறை அதிகாரி சஸ்பெண்டு!
வியாழன் 19, மே 2022 4:22:50 PM (IST)

கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
வியாழன் 19, மே 2022 12:40:21 PM (IST)

பிளஸ்-1 மாணவியை பெண் கேட்டு ரகளை: தட்டிக் கேட்ட மூதாட்டியை வெட்டிக்கொன்ற ரவுடி கைது!
வியாழன் 19, மே 2022 11:23:36 AM (IST)

முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மகன் திடீர் சந்திப்பு : அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக பாராட்டு
வியாழன் 19, மே 2022 11:14:22 AM (IST)

சிதம்பரம் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 19, மே 2022 10:53:49 AM (IST)
