» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதிய இந்தியாவை படைப்போம் - சர்வதேச பெண் குழந்தைகள் தினம் : ஆளுநர் தமிழிசை வாழ்த்து
திங்கள் 24, ஜனவரி 2022 11:45:39 AM (IST)
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை இந்த சமூகம் நிரூபிப்பதற்கு அடித்தளமாக இந்த சர்வதேச பெண் குழந்தைகள் நாளில் உறுதியேற்போம். பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம். புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம். அனைவருக்கும் பெண் குழந்தைகள் நாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
adaminJan 24, 2022 - 03:03:13 PM | Posted IP 192.8*****