» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெண்ணை ஆபாசமாகச் சித்திரித்து வாட்ஸ்-அப்பில் பகிர்வு : இளைஞர் கைது!
சனி 15, ஆகஸ்ட் 2026 8:21:55 AM (IST)
இளம்பெண்ணை ஆபாசமாகச் சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, அதைத் தட்டிக்கேட்ட அப்பெண்ணையும் அவரது தந்தையையும் மிரட்டிய இளைஞரை ஆறுமுகனேரி போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த சிந்தா மதார் சாகிப் மகன் முகமது ரிச்வி (25). இவர் 25 வயது இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்திரித்து 'வாட்ஸ்-அப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இச்செயலைப் பற்றி அறிந்த அந்தப் பெண்ணும் அவரது தந்தை சுலைமானும் முகமது ரிச்வியின் வீட்டிற்குச் சென்று தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் இருவரையும் முகமது ரிச்வி அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆறுமுகனேரி காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமது ரிச்வியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)

பார்வதிபுரம் – ஆசாரிப்பள்ளம் சாலையில் ராட்சத பள்ளம்: அதிகரிக்கும் வாகன விபத்துகள்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:01:38 PM (IST)

கன்னியாகுமரி எஸ்.பி. மீது அவதூறு : சவுக்கு சங்கருக்கு ஆதித்தமிழர் கட்சி கடும் கண்டனம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:19:18 PM (IST)

தோழி பணிபுரியும் மகளிர் விடுதி கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 12:53:26 PM (IST)

நாகர்கோவில் - கோட்டையம் இருமார்க்கங்களிலும் ரயில் இயக்க குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:06:13 PM (IST)

ஆசிரியர்கள் கண்டித்ததால் +1 மாணவர் தற்கொலை: மாணவர்கள் வகுப்புறக்கணிப்பு - சாலை மறியல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:57:34 AM (IST)


