» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
உணவகங்களுக்கு வெளியே சமையல் அடுப்புகள் வைக்க தடை: மாநகராட்சி ஆணையர் உத்தரவு!
திங்கள் 29, ஜூன் 2026 11:57:02 AM (IST)

உணவகங்கள், தங்களது சமையல் அடுப்புகளை கடையின் உட்புறத்தில் மட்டுமே வைத்துப் பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ஐஷ்வர்யா உத்தரவிட்டார்.
நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் சில உணவகங்கள், தங்களது சமையல் அடுப்புகளைக் கடைக்கு வெளியே வைத்துப் பயன்படுத்துவதால் சாலையோரங்களில் செல்லும் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறு ஏற்படுவதாக மாநகராட்சி ஆணையர் இரா. ஐஷ்வர்யாவுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து, நேற்று பார்வதிபுரம் பகுதியில் மாநகராட்சி ஆணையர் இரா. ஐஷ்வர்யா நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவகங்களுக்கு வெளியே பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த சமையல் அடுப்புகளை உடனடியாக அகற்றி, கடையின் உட்புறத்தில் மட்டுமே வைத்துப் பயன்படுத்த வேண்டும் என்று உணவக உரிமையாளர்களுக்கு அவர் அதிரடி உத்தரவிட்டார்.
மேலும், நாகர்கோவில் மாநகரப் பகுதி முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களும் தங்களது சமையல் கூடங்களைக் கடையின் உட்புறத்திற்கு உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட உணவகங்கள் மீது சட்டப்படி கடுமையான உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களுக்கு இது போன்ற இடையூறுகள் ஏதேனும் ஏற்பட்டால், அதனை உடனடியாக மாநகராட்சிக்குத் தெரியப்படுத்தும் வகையில் 9487038984 என்ற பிரத்யேகப் புலன (WhatsApp) புகார் எண்ணையும் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)

குமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:37:08 PM (IST)


