» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வீட்டை உடைத்து 46 பவுன் நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது; நகைகள் மீட்பு!

திங்கள் 23, மார்ச் 2026 9:40:44 PM (IST)

குளச்சல் அருகே பூட்டிய வீட்டை உடைத்து 46 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபரை, மாவட்டக் காவல்துறை தொழில்நுட்ப விசாரணையின் மூலம் ஒரே நாளில் கைது செய்து அசத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறும்பனை பகுதியைச் சேர்ந்தவர் சுஜின் மோன். இவரது மனைவி மேரி கிபி லின்சா. இவர்களது பூட்டிய வீட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சுமார் 46 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி, குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரேகா ஆர். நங்லட் மேற்பார்வையில், ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப விசாரணையின் அடிப்படையில், இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது முட்டம் பகுதியைச் சேர்ந்த தாசன் என்பவரது மகன் சகாய ஜோஸ் ஆண்டனி என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை விரைந்து கைது செய்த போலீசார், அவரிடமிருந்து திருடப்பட்ட 46 பவுன் நகைகளையும் முழுமையாக மீட்டனர்.

புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கண்டறிந்து, நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரின் துரித நடவடிக்கையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory