» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
டேட்டிங் செயலி மூலம் பொறியாளரை தனியாக வரவழைத்து பணம் பறிப்பு - போலீஸ் விசாரணை!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:36:27 PM (IST)
தக்கலையில் டேட்டிங் செயலியை பயன்படுத்திய பொறியாளரை தனியாக வரவழைத்து தாக்கி பணம், செல்போன் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை பெருங்குழி பகுதியைச் சேர்ந்தவர் வினுகுமார் (39). கட்டுமான பொறியாளரான இவர், செல்போனில் பயன்படுத்தக்கூடிய "டேட்டிங் செயலி” ஒன்றை சமூக வலைதள பக்கம் மூலமாக பார்த்தார்.அந்த செயலி மூலம் சில நபர்கள் வினுகுமாரை தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் நேரில் சந்திக்கலாம் என்று கூறி பள்ளியாடி அருகே உள்ள குழிக்கோடு பகுதிக்கு அழைத்தனர். அதன்பேரில் வினுகுமாரும் நேற்று மாலை அந்த இடத்துக்கு சென்றார்.
அப்போது அந்த இடத்தில் மறைவாக பதுங்கியிருந்த 3 பேர் வினுகுமாரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவரது செல்போனை பறித்தனர். மேலும் அவரை சரமாரியாக தாக்கி, பணம் கேட்டு மிரட்டினர். இதனால் பயந்துபோன வினுகுமார், தன்னிடம் இருந்த ஆயிரம் ரூபாயை அந்த நபர்களிடம் கொடுத்தார்.
இதையடுத்து அந்த நபர்கள், வினுகுமாரிடம் பறித்த பணம் மற்றும் செல்போனுடன் அங்கிருந்து சென்றுவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த வினுகுமார் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன்னை 3 நபர்கள் தனியாக வரவழைத்து தாக்கி, பணம் மற்றும் செல்போனை பறித்ததாக அவர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், வினுகுமாரை "டேட்டிங் செயலி” மூலம் வரவழைத்து தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்தவர்கள் பள்ளியாடியைச் சேர்ந்த சாலமன் பிரபு (29), வென்டார்வின் மற்றும் இன்னொருவர் என தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:39:13 PM (IST)

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:43:29 AM (IST)

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)
