» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வக்கீல் வீட்டில் நகை திருடியதாக த.வெ.க. பெண் நிர்வாகி கைது : நாகர்கோவில் அருகே பரபரப்பு
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 8:26:12 AM (IST)
நாகர்கோவில் அருகே வக்கீல் வீட்டில் நகை திருடியதாக த.வெ.க. பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அந்த பெண் த.வெ.க.வில் நிர்வாகியாக உள்ளார். சம்பவத்தன்று விஜயகுமார் வீட்டில் இருந்த போது, அர்ஷிதா டிப்னி அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதாவது, உங்களுடைய வீட்டு அருகே நிற்பதாகவும், தனக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் உடனடியாக கழிவறை செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய விஜயகுமார், அர்ஷிதா டிப்னியை தன்னுடைய வீட்டுக்கு வரும்படி அழைத்தார். பிறகு வீட்டுக்கு வந்த அவரை கழிவறைக்கு அனுப்பினார். அந்த சமயத்தில் விஜயகுமார் வீட்டுக்கு வெளியே நின்றபடி தனது நண்பருடன் செல்போனில் பேசியபடி இருந்தார். சுமார் 10 நிமிடம் கழித்து கழிவறையில் இருந்து வெளியே வந்த அர்ஷிதா டிப்னி, விஜயகுமாரிடம் கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.
பின்னர் 2 நாட்களுக்கு பிறகு வீட்டு பீரோவில் இருந்த நகை, கம்மல், மோதிரம் உள்பட 90 கிராம் தங்க நகை காணாததை கண்டு விஜயகுமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். அர்ஷிதா டிப்னி வீட்டுக்கு வந்து சென்ற பிறகு யாரும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவர் மீது விஜயகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து அந்த பெண்ணிடம் அவர் விசாரித்த போது, சரியான பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து விஜயகுமார் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு அர்ஷிதா டிப்னியை போலீசார் கைது செய்தனர். வீட்டில் நகை திருடியதாக த.வெ.க. பெண் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப கட்டுமான பணிகள் : ஆட்சியர் ஆய்வு
புதன் 17, செப்டம்பர் 2025 3:30:36 PM (IST)

குமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 3:25:32 PM (IST)

காதல் மனைவி கோபித்து சென்றதால் விபரீதம் : வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!!
புதன் 17, செப்டம்பர் 2025 11:47:38 AM (IST)

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)
