» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு

சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிமைப்பணிகள் தொகுதி - 4 தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் குமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடிமைப்பணிகள் தொகுதி IV தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (12.07.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி - IV பதவிகளுக்கான தேர்வு இன்று நடைபெற்றது. 

தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் 28,651 நபர்கள் தேர்வு எழுதினார்கள். தேர்வு நடைபெறும் ஒவ்வொரு மையங்களில் கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், Mobile Unit, ஒவ்வொரு தேர்வு அறைக்கும் ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory