» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு!
திங்கள் 19, மே 2025 4:03:34 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோவானை மலர் வணிக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேற்கூடாரத்தினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் இன்று (19.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்திற்குகென பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்கள்.
அதன்ஒருபகுதியாக தமிழ்நாட்டிலேயே மிகவும் பிரசித்திப்பெற்ற தோவாளை மலர் சந்தையினை மேம்படுத்தும் வகையிலும், மலர்கள் விற்பனை செய்பவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையிலும், பாதுகாப்பு தன்மையுடன் மலர்களை விற்பனை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய நிதியின் கீழ் ரூ.2.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மலர் சந்தைக்கு வரும் வியாபாரிகள், நுகர்வோர்களின் வசதிக்காக மழை மற்றும் வெயில் காலங்களில் மலர் வணிகம் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு இந்த மேற்கூரை மிகவும் அவசியம். மேற்கூரை அமைப்பதன் வாயிலாக மலர்கள் வீணாகாமல், பாதுகாக்கப்படுவதோடு, மழைக்காலங்களில் சேறு சகதிகளிலிருந்து வியாபாரிகளையும், நுகர்வோர்களையும் பாதுகாக்கும்.
எனவே இந்த மேற்கூரை அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து, மலர் விற்பனையாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து தோவாளை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் கீழ் தோவாளை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தினை திறந்து வைத்தார்கள்.
நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் என்.சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், ஆவின் பொது மேலாளர் மகேஷ்வரி, துணை பதிவாளர் சைமன் சார்லஸ், ஆவின் மேலாளர் ஷீபா அலெக்ஸ், கேட்சன், பூதலிங்கம், பிராங்கிளின், நெடுஞ்செழியன், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் மெகா வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு!
சனி 24, மே 2025 3:30:48 PM (IST)

அகஸ்தீஸ்வரம், இராஜாக்கமங்கலம் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகள் : ஆட்சியர் ஆய்வு
சனி 24, மே 2025 10:36:54 AM (IST)

டெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது: பேண்ட்டை தைக்க மறுத்ததால் வெறிச்செயல்!
சனி 24, மே 2025 8:47:27 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் படகு ஓட்டுநர் பயிற்சி தொடக்கம்!
வெள்ளி 23, மே 2025 5:52:30 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 23, மே 2025 5:18:23 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை : போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 23, மே 2025 12:39:23 PM (IST)
