» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
போலீஸ்காரரின் வீட்டு கதவை உடைத்து நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை!!
வெள்ளி 11, அக்டோபர் 2024 11:28:37 AM (IST)
கருங்கல் அருகே போலீஸ்காரரின் வீட்டு கதவை உடைத்து நகை-பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
குமரி மாவட்டம், கருங்கல் அருகே கம்பிளார் தேவாண்டிவிளையைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவருடைய மகன் லாசர். இவர் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்த லாசர், கடந்த 2-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றார்.
8-ந்தேதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர் தங்கலீலா என்பவரிடம் லாசரின் வீடு திறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தங்கலீலாவின் மகன் ஜிஸ்பா அங்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
இதுபற்றி லாசருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் கூறியபடி சோதனை செய்ததில், பீரோவில் இருந்த 2¾ பவுன் தங்கநகை மற்றும் வீட்டில் இருந்த செம்பு குட்டுவம், செம்பு குடம், டேபிள்பேன், மிக்ஸி, கிரைண்டர், 7 பட்டுச்சேலைகள் ஆகியவை மாயமாகி இருந்தன. வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகை மற்றும் பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து லாசரின் உறவினர் ஜிஸ்பா கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை ேதடி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் 1025 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணை
சனி 13, டிசம்பர் 2025 10:33:38 AM (IST)

குமரியில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35பேர் உள்ளனர்: ஆட்சியர் அழகுமீனா தகவல்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:50:25 PM (IST)

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று: காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:31:00 PM (IST)

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது தேர்தல் பணிகள் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 4:49:45 PM (IST)


.gif)