» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குடும்பத் தகராறில் தீக்குளித்த பெண் மரணம் : தூத்துக்குடி அருகே சோகம்!
ஞாயிறு 19, மே 2024 11:28:10 AM (IST)
தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி சோலையம்மாள் (43). இந்த தம்பதிகளின் மகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தந்தையின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் சோலையம்மாள் கணவன் பேச்சையும் மீறி மகளுடன் பேசியதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த மாரியப்பன், சோலையம்மாளை சத்தம் போட்டு உள்ளார். இதில் மனவேதனை அடைந்த சோலையம்மாள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் சப் இன்ஸ்பெக்டர் குருசாமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சனி 4, ஏப்ரல் 2026 5:16:41 PM (IST)

ஈஸ்டர் திருநாள்: அன்பும், சகிப்புத்தன்மையும் பெருகட்டும் - விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து!
சனி 4, ஏப்ரல் 2026 4:48:36 PM (IST)

குமரி - திருப்பதி இடையே ஸ்லீப்பர் பஸ் வசதி அறிமுகம்: ஆன்மீகப் பயணிகள் மகிழ்ச்சி!
சனி 4, ஏப்ரல் 2026 3:38:08 PM (IST)

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா வேன்: கன்னியாகுமரியில் பரபரப்பு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 9:42:39 PM (IST)

காய், கனிகளால் ஜொலிக்கும் தேர்தல் விழிப்புணர்வு: கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:06:12 PM (IST)

கோவில், வீடுகளில் திருட்டு: இருவர் கைது!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 10:37:15 AM (IST)


ஓடுகாலிDec 25, 1716 - 03:30:00 AM | Posted IP 162.1*****