» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பரமன்குறிச்சி பாலம் பணியை கைவிட வேண்டும் : இந்து முன்னணி கோரிக்கை!
ஞாயிறு 19, மே 2024 11:00:04 AM (IST)
பரமன்குறிச்சி -வெள்ளாளன்விளை சாலையில் பாலம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு சுமார் 2 மாதம் கடந்து போக்குவரத்திற்காக சாலை சரிசெய்யப்பட்டது. தற்போது அந்த சாலையில் பாலம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலம் கட்டினால் மேற்கு பகுதியில் வரும் மழை தண்ணீர் எங்கே போகும்? கீழ்புறம் உள்ள தேரிநிலம் அரசுக்கு சொந்தமானதா? அந்த தேரியை கடந்து தண்ணீர் எங்கே செல்லும்? என்று முழு ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை பாலம் கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேரத்தில் பத்து ஆண்டு பின்னோக்கி சென்று விட்டது என்று நீங்கள் தான் சொன்னீர்கள். எத்தனையோ பகுதி இன்னும் இதைவிட மோசமாக உள்ளது. எனவே பரமன்குறிச்சி -வெள்ளாளன்விளை சாலையில் பாலம் அமைக்கும் பணிகளை விட்டு விட்டு, மாவட்ட நிர்வாகம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை துரிதப்படுத்தி மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் சீரமைப்பு பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 21, மார்ச் 2025 12:46:49 PM (IST)

மார்ச் 24ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
வெள்ளி 21, மார்ச் 2025 12:21:41 PM (IST)

கன்னியாகுமரி - சார்லபள்ளி கோடைகால சிறப்பு ரயில்கள்: முன்பதிவு நாளை தொடங்குகிறது!
வியாழன் 20, மார்ச் 2025 5:26:26 PM (IST)

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி : கன்னியாகுமரியில் பரபரப்பு
வியாழன் 20, மார்ச் 2025 11:17:44 AM (IST)

கிருஷ்ணன்கோவில் நியாயவிலைக்கடையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
புதன் 19, மார்ச் 2025 5:07:27 PM (IST)

வேலைவாய்ப்புகளை பெருக்க தவறிய மத்திய அரசு: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி பேச்சு
புதன் 19, மார்ச் 2025 4:14:06 PM (IST)
